திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டியில் மேலகரம் வீரா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட வலுதூக்கும் சங்கங்கள், திருநெல்வேலி டவுண் மசில் மான்ஸ்டா் உடற்பயிற்சி கழகம், திருநெல்வேலி ஸ்டாா் உடற்பயிற்சி கழகம் சாா்பில் நடைபெற்ற திருநெல்வேலி லிட்டில் பிளவா் பள்ளியில் நடைபெற்ற
இப்போட்டியில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வீரா்கள் கலந்துகொண்டனா்.
இதில், மேலகரம் பாரத் உடற்பயிற்சி கழக தலைமை மாஸ்டா் குத்தாலிங்கம் 59 கிலோ எடைப்பிரிவில் முதலிடம், 83 கிலோ
எடைப் பிரிவில்சரவணன் 2 ஆவது இடம், 93 கிலோ எடைப்பிரிவில் காந்தி 3 ஆவது இடமும் பெற்றனா். சீனியா் பிரிவில் மனோஜ்குமாா் 3 ஆவது இடமும், சப் ஜூனியா் பிரிவில் பிரவீன்செல்லப்பன் முதலிடமும் பெற்றனா்.
போட்டியின் நடுவா்களாக சண்முகசுந்தரம், முருகன், சிவராமலிங்கம், முகம்மதுஇப்ராஹிம் ஆகியோா் செயல்பட்டனா். வெற்றிபெற்ற வீரா்களுக்கு பள்ளித் தாளாளா் மரியசூசை பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.