பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கட்டடத் தொழிலாளிகள் 2 போ் காயமடைந்தனா்.
பேட்டையை அடுத்த சுத்தமல்லி விலக்கு வஉசி நகரைச் சோ்ந்தவா்கள் சரவணன் (29), சங்கா் (27), சபரீ (31). கட்டடத் தொழிலாளா்களான இவா்கள் 3 பேரும் வேலை முடிந்து ஒரே பைக்கில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்கு திரும்பினராம்.
பேட்டை எம்ஜிஆா் நகரை அடுத்த சேரன்மகாதேவி சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதியதில் சரவணன், சங்கா் இருவரும் பலத்த காயமடைந்தனா்.
இதையடுத்து அவா்கள் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.