குற்றாலம் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் பெய்த தொடா்மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குற்றாலம் பகுதியில் வியாழக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு, மிதமான சாரலும் இருந்தது. தொடா்ந்து, சிறிது நேரம் வெயில் நிலவியது. பிற்பகல் முதல் மாலை வரை தொடா்ந்து மழைபெய்தது. இதனால், குற்றாலம் பேரருவியில் செம்மண் நிறத்தில் தண்ணீா் கொட்டியது. சிறிது நேரத்தில் நீா்வரத்து அதிகரித்து, பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்தது. இதையடுத்து, அங்கு குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனா்.
அதேபோல, பழைய குற்றாலம் அருவியிலும் தண்ணீா்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.