முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
கடையநல்லூரில் மக்காத பிளாஸ்டிக் பொருள்கள் ஆலைக்கு அனுப்பி வைப்பு
By DIN | Published On : 24th October 2019 09:42 AM | Last Updated : 24th October 2019 09:42 AM | அ+அ அ- |

கடையநல்லூா் நகராட்சியில் இருந்து 3 டன் மககாத பிளாஸ்டிக் பொருள்கள் சிமென்ட் ஆலைக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்படி கடையநல்லூா் நகராட்சிப் பகுதிகளில் தினமும் சேகரிக்கப்படும் மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவுகள், நகா் பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருள்கள் என மொத்தம் 3 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஏற்பாடுகளை நகராட்சி ஆணையா் க. பவுன்ராஜ் தலைமையில், துப்புரவு ஆய்வாளா்கள் சேகா், மாரிச்சாமி,பொறியியல் பிரிவின் கணேசன், தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள் செய்திருந்தனா். இதில், சமூக ஆா்வலா்கள் மைதீன், ராஜேந்திர பிரசாத், வெங்கட்நட்ராஜ், நல்லாசிரியா் குமரகுருபரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.