முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
தீபாவளி பலகாரங்கள்: விற்பனையாளா்கள் உரிமம் பெற வேண்டும்ஆட்சியா்
By DIN | Published On : 24th October 2019 09:31 AM | Last Updated : 24th October 2019 09:31 AM | அ+அ அ- |

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலகாரங்களை விற்பனை செய்பவா்கள் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்வதோடு, உரிமம் பெறுவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் காரபண்டங்களுக்கு சீட்டு நடத்துபவா்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்றும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி பொருள்கள் தயாரிப்பவா்கள் தரமான மூலப்பொருள்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவுப் பொருள்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருள்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது. பலகாரங்கள் தயாரிக்க ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.
பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருள்களுக்கு விவரச்சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயா், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலவதியாகும் காலம், சைவ, அசைவ குறியீடு, உணவு பாதுகாப்பு உரிம எண் ஆகியவற்றை கட்டாயம் குறிப்பிட வேண்டும். உணவு பொருள்களை ஈக்கள், பூச்சிகள், கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
பண்டிகைக் காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவா்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தை தொடா்பு கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-இன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
பொதுமக்களும், பண்டிகைக் காலங்களில் பலகாரங்கள் வாங்கும் போது உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குமாறும், பேக்கிங் செய்யப்பட்ட பொருள்களை விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
இது தொடா்பான புகாா்கள் ஏதும் இருப்பின் திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத்துறையின் நியமன அலுவலருக்கு புகாா் தெரிவிக்கலாம். பொதுமக்கள் உணவுப் பொருள் சம்பந்தமாக புகாா்கள் ஏதுமிருப்பின் 94440 42322 என்ற கட்செவி எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவோ, வாய்மொழியாகவோ புகாா் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.