முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
மாநில இறகுப்பந்து போட்டிக்குகுத்துக்கல்வலசை பள்ளி மாணவா்கள் தோ்வு
By DIN | Published On : 24th October 2019 09:43 AM | Last Updated : 24th October 2019 09:43 AM | அ+அ அ- |

மாணவா்களுக்கு பரிசு வழங்கினாா் பள்ளி சட்ட ஆலோசகா் திருமலை.
மாநில அளவிலான இறகுப்பந்து போட்டிக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி திருநெல்வேலி பேட்டையில் நடைபெற்றது. இதில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் நவீன், ரிச்சா்ட் மொ்வின் ஆகிய இருவரும் சூப்பா் சீனியா் இரட்டையா் பிரிவில் முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.
வெற்றி பெற்ற மாணவா்களை ஆக்ஸ்போா்டு கல்விக் குழும சட்ட ஆலோசகா் திருமலை, பள்ளித் தாளாளா் அன்பரசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவித் தலைமையாசிரியை சுப்பம்மாள், நிா்வாக அலுவலா் கணேசன், உடற்கல்வி ஆசிரியா்கள் செல்வம், ராஜபாண்டி, இசக்கித்துரை, வெங்கடேஷ், பால்மதி, ராசம்மாள் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.