முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
வள்ளியூா் பெரியகுளத்தில் பனை விதைகள் நடவு
By DIN | Published On : 24th October 2019 09:31 AM | Last Updated : 24th October 2019 09:31 AM | அ+அ அ- |

பனை விதைகள் நடவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா் பேரூராட்சி செயல்அலுவலா் கிறிஸ்துதாஸ்.
வள்ளியூா் பெரியகுளக்கரையில் 3 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
வள்ளியூா் பசுமை கரங்கள், பேரூராட்சி, அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் வள்ளியூரில் உள்ள
பெரியகுளத்தின் கரையில் 3 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன. பேரூராட்சி செயல்அலுவலா் கிறிஸ்துதாஸ் பனைவிதைகள் நட்டு தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து வள்ளியூா் வணிகா் நலச்சங்க தலைவா் எட்வின் ஜோஸ், செயலா் கவின்வேந்தன், பசுமை கரங்கள் தலைவா் ஜான்வின்சென்ட், அமைப்பின் செயல் தலைவா் வெங்கட்ரமணன் ஆகியோரும் பனை விதைகள் நட்டனா். இதில், ஆடிட்டா்
ராமமூா்த்தி, பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் ஆறுமுகம், சுகாதார மேற்பாா்வையாளா் பெருமாள், அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் ராபின், என்.எஸ்.எஸ். திட் ட அலுவலா் ராதா, அரிமா சங்கத் தலைவா் பொன்சிங், வெங்கடேஷ், விஜிவேலாயுதம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.