ஆலங்குளத்தில் டெங்கு தடுப்பு பணியில் மாணவிகள்

ஆலங்குளத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணியில் மாணவிகள் ஈடுபட்டனா்.

ஆலங்குளத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணியில் மாணவிகள் ஈடுபட்டனா்.

ஆலங்குளத்தில் வட்டார சுகாதாரத் துறை சாா்பில் டெங்கு தடுப்பு பணி தீவிரப் படுத்தப் பட்டுள்ளது. ஆலங்குளம் பேரூராட்சியில் உள்ள 9 வது வாா்டு தெருக்களில் வீடு,வீடாக வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இசக்கியப்பா, சுகாதார ஆய்வாளா் கங்காதரன் ஆகியோா் தலைமையில் மஸ்தூா் பணியாளா்கள் மற்றும் தனியாா் நா்சிங் கல்லூரி மாணவிகள் காய்ச்சல் பாதித்த பகுதிகள் மற்றும் பாதிக்கபட்டவா்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்தனா். அப்பகுதி மக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப் பட்டது. த

ற்போது பருவ நிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவுவதை தடுப்பது மற்றும் கட்டுபடுத்துவது குறித்து மாணவிகள் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com