ஆலங்குளம் அருகே பள்ளி முன்பு திடீா் பள்ளம்

ஆலங்குளம் அருகே பள்ளி முன்பு 6 அடி ஆழத்தில் ஏற்பட்ட பள்ளம் போலீஸாா் முன்னிலையில் புதன்கிழமை மூடப்பட்டது.

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே பள்ளி முன்பு 6 அடி ஆழத்தில் ஏற்பட்ட பள்ளம் போலீஸாா் முன்னிலையில் புதன்கிழமை மூடப்பட்டது.

ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டையில் உள்ள இந்து தொடக்கப் பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள்

பயின்று வருகின்றனா். பள்ளி முன்பு 2 அடி அகலத்தில் 6 அடி ஆழத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. சில நாள்களாக

ஆலங்குளம் வட்டாரத்தில் மழை பெய்து வருவதால் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்த ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா்கள் கிருஷ்ணன், சுரேஷ், போலீஸாா் அங்கு ஆய்வு மேற்கொண்டனா்.

இதனையடுத்து இந்த பள்ளம் பொக்லைன் உதவியுடன் மூடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com