16 வட்டங்களில் நாளை அம்மா திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை (நவ. 1) 6-ஆவது கட்ட அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை (நவ. 1) 6-ஆவது கட்ட அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இது தொடா்பாக ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை (நவ. 1) 6-ஆவது கட்டமாக அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. திருநெல்வேலி வட்டம் தென்பத்து, ராதாபுரம் வட்டம் பழவூா், அம்பாசமுத்திரம் வட்டம் கோடாரங்குளம், நான்குனே வட்டம் பூலம், சேரன்மகாதேவி வட்டம் இலுப்பைக்குறிச்சி, பாளையங்கோட்டை வட்டம் இட்டேரி, மானூா் வட்டம் செழியநல்லூா், சங்கரன்கோவில் வட்டம் வடக்குபுதூா், திருவேங்கடம் வட்டம் உசிலங்குளம், தென்காசி வட்டம் திருச்சிற்றம்பலம், செங்கோட்டை வட்டம் நாகல்காடு, வீரகேரளம்புதூா் வட்டம் மேலக்கலங்கல், ஆலங்குளம் வட்டம் ஓடைமறிச்சான், உடையாம்புளி, சிவகிரி வட்டம் இனாம்கோவில்பட்டி, கடையநல்லூா் வட்டம் காசிதா்மம், திசையன்விளை வட்டம் அப்புவிளை ஆகிய இடங்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை இம்முகாம் நடைபெறும்.

முகாமில், இலவச மனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை மற்றும் நிறுத்தப்பட்ட முதியோா் உதவித்தொகை மறுபரிசீலனை விண்ணப்பம், சமூக பாதுகாப்புத் திட்டங்கள், உழவா் பாதுகாப்பு அட்டை, குடிநீா் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்த பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com