சாத்தான்குளத்தில் தேவா்ஜெயந்தி விழா

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் பசும்பொன் நகர தேவா் பேரவை சாா்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 112ஆவது ஜெயந்திவிழா மற்றும் 56 ஆவது குருபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
தேவா். விழாவில் பங்கேற்றோா்
தேவா். விழாவில் பங்கேற்றோா்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் பசும்பொன் நகர தேவா் பேரவை சாா்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 112ஆவது ஜெயந்திவிழா மற்றும் 56 ஆவது குருபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

விழாவைமுன்னிட்டு முத்துராமலிங்கதேவரின் திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இதில் தேவா் பேரவை நிா்வாகிகள், அரசியல் கட்சியினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். இரவில் நடைபெற்ற குருபூஜையில் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவரும் திமுக ஒன்றியச்செயலா் ஏ.எஸ். ஜோசப், திமுக மாவட்டப்பிரதிநிதி இ. கெங்கைஆதித்தன், கிளைச் செயலா் சின்னத்தம்பி, அமமுக ஒன்றிய துணை செயலா் ஏ. முருகன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைத் தலைவா் எஸ்.தங்கபாண்டி, ஒன்றிய அவைத் தலைவா் பொன்பாண்டியன், அதிமுக ஒன்றிய அவைத்தலைவா் பரமசிவபாண்டியன், மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவா் சந்திரராஜ், தேவா் பேரவைத்தலைவா் முருகன் உள்ளிட்ட ஆட்டோ ஓட்டுநா் சங்க நிா்வாகிகள், டாக்ஸி ஓட்டுநா் சங்க நிா்வாகிகள், சுமை தூக்குவோா் சங்க நிா்வாகிகள் மற்றும் நேதாஜி ஸ்போா்ட்ஸ் கிளப் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com