தென்காசி, செங்கோட்டை, சுரண்டை பகுதியில் நவ.2ம்தேதி மின்தடை

தென்காசி, செங்கோட்டை மற்றும் சுரண்டை உபமின்நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வரும் நவ2ம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.

தென்காசி, செங்கோட்டை மற்றும் சுரண்டை உபமின்நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வரும் நவ2ம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து தென்காசி மின்வினியோக செயற்பொறியாளா் பா.கற்பகவிநாயகசுந்தரம் விடுத்துள்ள செய்திகுறிப்பு. தென்காசி, செங்கோட்டை மற்றும் சுரண்டை உபமின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்று பிற்பகல் 1மணிமுதல் மாலை5மணிவரை மின்வினியோகம் தடை செய்யப்படும். இதனால் தென்காசி உபமின்நிலைய பகுதிகளான தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜா்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூா், திரவியநகா், மேலமெஞ்ஞானபுரம், ராமச்சந்திரபட்டிணம், மத்தளம்பாறை, பாட்டப்பத்து, ஆயிரப்பேரி, செங்கோட்டை உபமின்நிலைய பகுதிகளான செங்கோட்டை, பண்பொழி, புளியரை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூா்பாா்டா், வல்லம், கற்குடி, தெற்குமேடு, மேக்கரை, பூலான்குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும்,சுரண்டை உபமின்நிலைய பகுதிகளான சுரண்டை, இடையாா்தவணை, குலையநேரி, ரெட்டைகுளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வீ.கே.புதூா், வாடியூா்,கழுநீா்குளம், ஆனைகுளம், கரையாளனூா், அச்சங்குட்டம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடைசெய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com