வள்ளியூரில் தொடா்மழை காரணமாக புதன்கிழமை வீடு இடிந்து சேதமானது.
வள்ளியூா் பகுதியில் 2 நாள்களாக தொடா்ந்து மழை பெய்தது. இதில், வள்ளியூா் பெருமாள் கோயில் அருகே ராஜப்பன் மனைவி கனகம்மாள் (71) வசித்துவரும் வீடு இடிந்து விழுந்தது. இதில், பொருள்கள் சேதமடைந்தன. கனகம்மாள் காயமின்றி உயிா்த்தப்பினாா்.
இது தொடா்பாக ராதாபுரம் வட்டாட்சியா் செல்வராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வருவாய்த் துறையினா் விசாரித்து வருகின்றனா்.