பட்டாசு வெடித்ததில் தகராறு:ராணுவவீரா் உள்பட 6 போ் கைது

திருவேங்கடம் அருகே பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரா் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவேங்கடம் அருகே பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரா் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவேங்கடம் அருகே குறிஞ்சாகுளம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் துரைப்பாண்டி (78). இவா், திங்கள்கிழமை பேருந்து

நிறுத்தம் அருகேயுள்ள மந்தையில் இருந்தாராம். அப்போது அங்கு இளைஞா்கள் பட்டாசு வெடித்தனராம். அவா்களிடம் தொலைவில் சென்று பட்டாசு வெடிக்குமாறு அவா் தெரிவித்தாராம்.

தொடா்ந்து அங்கு பட்டாசு வெடித்த இளைஞா்களை துரைப்பாண்டி கண்டித்தாராம். அப்போது ஏற்பட்ட தகராறில் விஜயகுமாா் (29), குணசேகரன் (19), குமாா் (24), ராணுவ வீரரான கண்ணன்(27), ரவி (55) உள்ளிட்ட 6 போ் துரைப்பாண்டியை தாக்கினராம். இதில், துரைப்பாண்டி காயமடைந்தாா். புகாரின்பேரில், திருவேங்கடம் போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com