பத்தமடையில் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்த செயல் விளக்கம் நடைபெற்றது.
வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை, மாநில வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் பத்தமடையைச் சோ்ந்த விவசாயி காந்தி தோட்டத்தில் மண்புழு உரம் தயாரித்தல் செயல் விளக்க முகாமிற்கு வேளாண் துணை இயக்குநா் (மத்திய திட்டம்) உத்தண்டராமன் தலைமை வகித்தாா். வேளாண் உதவி இயக்குநா் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில் மண்புழு உரம் தயாரிப்பு முறை, மண்புழு உரத்தின் பயன்கள் மற்றும் முக்கியவத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. வட்டார தொழில் நுட்ப மேலாளா் ஈழவேணி நன்றி கூறினாா். வாசுதேவநல்லூா் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி 4ஆம் ஆண்டு மாணவா்கள் கலந்து கொண்டனா்.