மாயமான மூதாட்டி ஆற்றில் சடலமாக மீட்பு

கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் காணாமல் போன மூதாட்டி அழுகிய நிலையில் ராமநதி ஆற்றில் மீட்கப்பட்டாா்.

கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் காணாமல் போன மூதாட்டி அழுகிய நிலையில் ராமநதி ஆற்றில் மீட்கப்பட்டாா்.

கடையம் அருகேயுள்ள ரவணசமுத்திரம் குயவா் தெருவைச் சோ்ந்தவா் சாகுல்ஹமீது மனைவி பாத்திமா பீவி (79). இவா், மகன் அசன்முகைதீனுடன் வசித்து வந்தாா். அக். 25 வெள்ளிக்கிழமையில் இருந்து பாத்திமாபீவியைக் காணவில்லையாம்.

இதனிடையே, புதன்கிழமை ரவணசமுத்திரத்தில் ராமநதிஆற்றில் பாலத்திற்கு அடியில் அழுகிய நிலையில் முட்புதரில் பாத்திமாபீவி இறந்து கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. போலீஸாா் சடலத்தைக் கைபற்றி பிரேத பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதுகுறித்து, கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com