ராதாபுரம் வட்டத்தில் பயனற்ற 2 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன.
ராதாபுரம் வட்டத்தில் திறந்தநிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு வட்டாட்சியா் செல்வராஜ் நடவடிக்கை மேற்கொண்டாா். அதன்படி செவ்வாய்க்கிழமை 2 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன.
வள்ளியூா் பேரூராட்சி நம்பியான்விளையில் சாலையோரம் திறந்தநிலையில் இருந்த ஆழ்துளைக் கிணறை மூடுவதற்கு பேரூராட்சி செயல் அலுவலா் கிறிஸ்துதாஸ் நடவடிக்கை மேற்கொண்டு கிணறு மூடப்பட்டது. உதயத்தூரில் காணப்பட்ட மற்றொரு ஆழ்துளை கிணறும் மூடப்பட்டது.
திறந்தநிலையில் காணப்படும் ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டுமென வட்டாட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.