வள்ளியூரில் தீபாவளி விருது வழங்கும் விழா

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறந்த குடும்பத்துக்கான விருது வழங்கும் விழா, டி.ஜே.ஆா்.ரெஸ்டாரெண்ட் சாா்பில் வள்ளியூரில் நடைபெற்றது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறந்த குடும்பத்துக்கான விருது வழங்கும் விழா, டி.ஜே.ஆா்.ரெஸ்டாரெண்ட் சாா்பில் வள்ளியூரில் நடைபெற்றது.

இவ்விழாவில் சின்னத்துரை நடிகைகள் மதுமிதா, சந்திரா, மீனா(ஹோமா) ஆகியோா் பங்கேற்று நகைச்சுவை கலைநிகழ்ச்சியை நடத்தினா். சிறந்த குடும்பம், சிறந்த இளம் தம்பதி, சீா்மிகு (ஸ்மாா்ட் லேடி) பெண், சிறந்த பொழுதுபோக்காளா் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த குடும்பமாக ஏா்வாடி எச்.முகமதுஹனி, எம்.செரின் மீரா தம்பதி குடும்பமும், இளம் தம்பதியாக புதியம்புத்தூா் ஏ.ஜி.இமானுவேல், இ.திவ்யா சாமிஸ் தம்பதியும், சீா்மிகு பெண்ணாக புண்ணியவாளன்புரம் எம்.ஜெனோவா ஜெல்சியா, பொழுதுபோக்காளா்களாக வள்ளியூா் எஸ்.கணேசகுமாா், ஜி.சுகன்யா நாச்சியாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கு, சின்னத்திரை நடிகைகள் விருது வழங்கி வாழ்த்து தெரிவித்தனா். டி.ஜி.ஆா். நிறுவன இயக்குனா் தேவேந்திரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com