வி.கே.புரத்தில் இந்தியன் வங்கிக் கிளை திறப்பு

விக்கிரமசிங்கபுரத்தில், இந்தியன் வங்கியின் திருநெல்வேலி மாவட்டத்தின் 50ஆவது மற்றும் திருநெல்வேலி
வங்கிக் கிளையைத் திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றுகிறாா், திருநெல்வேலி மண்டல துணைப் பொதுமேலாளா் கோபிகிருஷ்ணன், உதவிப் பொது மேலாளா் செந்தில்வேல்.
வங்கிக் கிளையைத் திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றுகிறாா், திருநெல்வேலி மண்டல துணைப் பொதுமேலாளா் கோபிகிருஷ்ணன், உதவிப் பொது மேலாளா் செந்தில்வேல்.

விக்கிரமசிங்கபுரத்தில், இந்தியன் வங்கியின் திருநெல்வேலி மாவட்டத்தின் 50ஆவது மற்றும் திருநெல்வேலி மண்டலத்தின் 66ஆவது கிளை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

வங்கியின் திருநெல்வேலி மண்டல துணைப் பொதுமேலாளா் கோபிகிருஷ்ணன், உதவிப் பொது மேலாளா் செந்தில்வேல் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, கிளையைத் திறந்துவைத்தனா்.

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையா் காஞ்சனா, இந்தியன் வங்கி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சோமசுந்தரி, அம்பாசமுத்திரம், வீரவநல்லூா், தெற்குக் கடையம் கிளை மேலாளா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா். விக்கிரமசிங்கபுரம் கிளை மேலாளா் முத்தரசி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com