இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர குழு உறுப்பினர் பிச்சம்மாள், சுடலைமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர். பால்மஞ்சு, கிருஷ்ணன், முத்துசாமி, மா.வைரமுத்து, மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் நகரச் செயலர் கணேசன், மாவட்ட குழு கணேசன், எஸ்.கிருஷ்ணன், எம்.சுடலை, சம்சுதீன், மாதர் சங்கத்தைச் சேர்ந்த சசிகலா, சுப்பிரமணியன், ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.