ஆலங்குளம் அருகே பைக்-வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
ஆலங்குளம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சாமுவேல் மகன் ஐசக் சாம் (20). ஆலங்குளம் அத்தியூத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு பயின்று வந்தார். திங்கள்கிழமை காலை தனது பைக்கில், கல்லூரிக்குச் சென்றபோது, அத்தியூத்தில் உள்ள வளைவான சாலையில் எதிரே வந்த வேனும் பைக்கும் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த ஐசக் சாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த ஆலங்குளம் போலீஸார் ஐசக் சாம் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநர் முத்துகிருஷ்ணப்பேரி ராஜாமணி மகன் செல்வத்திடம் விசாரிக்கின்றனர்.