16 வட்டங்களில் நாளை அம்மா திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் 16 வட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப். 13) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 16 வட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப். 13) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இம்மாவட்டத்தில் திருநெல்வேலி வட்டம் புதூர், உகந்தான்பட்டி, ராதாபுரம் வட்டம் இருக்கன்துறை, அம்பாசமுத்திரம் வட்டம் தெற்கு மடத்தூர், நான்குனேரி வட்டம் கள்ளிகுளம், சேரன்மகாதேவி வட்டம் திருவிருத்தான்புள்ளி,  பாளையங்கோட்டை வட்டம் மேலபுத்தனேரி, மானூர் வட்டம் பிள்ளையார்குளம், சங்கரன்கோவில் வட்டம் பெருமாள்பட்டி,  திருவேங்கடம் வட்டம் மலையான்குளம், தென்காசி வட்டம் சுந்தரபாண்டிபுரம், செங்கோட்டை  வட்டம் நெடுவயல், வீரகேரளம்புதூர் வட்டம் சிவகுருநாதபுரம், ஆலங்குளம் வட்டம் துத்திகுளம், சிவகிரி வட்டம் சுப்பிரமணியபுரம், கடையநல்லூர் வட்டம் புளியங்குடி, திசையன்விளை வட்டம் திசையன்விளை ஆகிய இடங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. 
காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இம்முகாமில், இலவச வீட்டுமனைப் பட்டா,  முதியோர் உதவித்தொகை, நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்பட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, நிலத்தாவாக்கள்,  சாலை - குடிநீர் வசதி தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்து பயன்பெறலாம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com