குற்றாலம் குற்றாலநாதர் கோயிலுக்குள்பட்ட சித்திரசபையில் புதன்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.
வருஷாபிஷேகத்தை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து கலசபூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் கோயில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் விஜயலட்சுமி தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.