நெல்லையில் செப்.14 இல் ஜெகநாதர் ரத ஊர்வலம்

திருநெல்வேலியில் ஜெகநாதர் ரத ஊர்வலம் சனிக்கிழமை (செப்.14) நடைபெற உள்ளது.

திருநெல்வேலியில் ஜெகநாதர் ரத ஊர்வலம் சனிக்கிழமை (செப்.14) நடைபெற உள்ளது.
தச்சநல்லூரில் உள்ள  ஸ்ரீ ராதா தாமோதர் வழிபாட்டு மையம்,  ஹரே கிருஷ்ண  அறக்கட்டளை ஆகியவை சார்பில்  ஸ்ரீ ஜெகநாதர் ரத ஊர்வலம் நடைபெறுகிறது. சனிக்கிழமை  மாலை 4.30 மணிக்கு பாலபாக்யாநகர் விநாயகர் கோயிலில் தொடங்கும்  இந்த ஊர்வலம்,  உடையார்பட்டி,  ரயில்வே பாலம்,  வாட்டர் டேங்க் டவுண் ரோடு, தச்சநல்லூர் புறவழிச்சாலை வழியாக  ராதா தாமோதர் வழிபாட்டு மையத்தை அடையும்.
ஊர்வலத்தின் நிறைவாக ஜெகநாதர் ரத ஊர்வல மகிமைகள் என்ற தலைப்பில் அமெரிக்காவில் வசிக்கும்  தவத்திரு காலசக்ர பிரபு உபன்யாசம் அளிக்க உள்ளார்.   இரவில் அன்னதானம்  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com