பழையபேட்டை அருகே காந்திநகரில் உள்ள சீரடி ஞான சாய்பாபா கோயிலில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை (செப்.12) நடைபெறுகிறது.
இதையொட்டி, வியாழக்கிழமை காலை 8.30 முதல் முற்பகல் 11.30 மணி வரை ஹோமம், பரிகார பூஜை, சங்கல்பம் ஆகியவை நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு வருஷாபிஷேகமும், கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறுகிறது.
அன்னதானமும் வழங்கப்படுகிறது. விழாவில் சாய் சேவா பரிவர் அமைப்பின் நிர்வாகிகள், பக்தர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.