பிரான்சிஸ் சேவியர் பொறியியல்  கல்லூரியில் ஓணம் பண்டிகை

திருநெல்வேலி வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை  கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை  கொண்டாடப்பட்டது.    
விழாவுக்கு,  ஸ்காட் குழுமங்களின் நிறுவனர் எஸ்.கிளிட்டஸ் பாபு  தலைமை வகித்தார்.  நிர்வாக இயக்குநர் அருண்பாபு முன்னிலை வகித்தார். மாணவி ஜெனிஷா  வரவேற்றார்.
கல்லூரி பேராசிரியர் இரா.ரவி,  ஸ்காட் குழுமங்களின் பொது மேலாளர்(நிதி) இக்னேஷியஸ் சேவியர், பொது மேலாளர்(வளர்ச்சி) ஜெயக்குமார்,  முன்னாள் மாணவர் சங்க இயக்குநர் எஸ்.கிருஷ்ணகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். 
கல்லூரியில் பயிலும் கேரள மாணவிகள்,  கேரளத்தின் பாரம்பரிய நடனமான திருவாதிரை நடனத்தை சிறப்பாக ஆடினர்.  கேரள மாணவர்கள் கேரளத்தின் கலாசாரப் பாடலான வஞ்சிப்பாட்டு பாடினர்.  துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர், மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர்.  
ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஜாய் வின்னி ஒய்ஸ் தலைமையில் கல்லூரியில் பயிலும் கேரள மாணவர், மாணவிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com