திருநெல்வேலி நகரத்தில் உள்ள நயினார்குளம் தூர் வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
திருநெல்வேலி கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் திருநல்வேலி நகரம் நயினார்குளம் தூர் வாரும் பணி தொடங்கியது. பணியை திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் தொடங்கி வைத்தார். அமைப்பின் தலைவர் இசக்கி, செயலர் மன்மதன், பொருளாளர் பாஸ்கரன், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.