பள்ளித் தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் மாவட்ட அறிவியல் மையம் இணைந்து நடத்திய ஆசிரியர் தின விழா மற்றும்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் மாவட்ட அறிவியல் மையம் இணைந்து நடத்திய ஆசிரியர் தின விழா மற்றும் உலக எழுத்தறிவு தின விழாவில் ரவணசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. 
கொக்கிரகுளம் மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட அறிவியல் மைய அலுவலர் குமார் தலைமை வகித்தார். ஆயுள் காப்பீட்டு மாநில முதன்மை ஆலோசகர் முருகன் முன்னிலை வகித்தார். திருநெல்வேலி மாவட்ட உதவி ஆட்சியர்(பயிற்சி) சிவகுரு பிரபாகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ரவணசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சந்திரனுக்கு நல்லாசிரியர் விருது வழங்கினார். 
நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் பூபதி ராஜேந்திரன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ரேணுகா, செளந்தரசேகரி, சம்பத்குமார், சீனிவாசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com