பொது இடங்களில் குப்பையை கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம்

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியப்  பகுதியில் குப்பையை கொட்டுவோருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியப்  பகுதியில் குப்பையை கொட்டுவோருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார கேடுகள் அதிகரித்துள்ளன. மேலும், பொது இடங்களில் கொட்டப்படும் குப்பைகள் தீவைத்து எரிக்கப்படுவதாகவும், இதனால், சுற்றுச்சூழல் மாசுபட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
எனவே, பொதுஇடங்களில் குப்பையை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. பொதுஇடங்களில் குப்பையை கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மீறினால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com