அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வருமாறு அதிமுகவினருக்கு மாநகர் மாவட்டச் செயலர் தச்சை என்.கணேசராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவுரைப்படி, அறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (செப்.15) காலை 11 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாநகர் மாவட்ட அதிமுகவின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள். எனவே அதிமுகவின் சார்பு அணி நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.