ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பாட்டாகுறிச்சியில் ஆர்ப்பாட்டம்

தென்காசி அருகே பாட்டாகுறிச்சியில் இந்திரா காலனி குடியிருப்போர் நலச் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தென்காசி அருகே பாட்டாகுறிச்சியில் இந்திரா காலனி குடியிருப்போர் நலச் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பாட்டாகுறிச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட நடைபாதை மற்றும் பொதுபயன்பாட்டுக்கான இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியும், இந்திரா காலனி குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்க பொறுப்பாளர் சங்கர் தலைமை வகித்தார். மல்லிகா முன்னிலை வகித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி வட்டார செயலர் அயூப்கான், தாணுமூர்த்தி ஆகியோர் பேசினர். மாரித்துரை, ராமசந்திரன்,லெட்சுமி, தாயம்மாள், மீனாட்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com