கடையத்தில் பனை விதைப்புத் திருவிழா

கடையத்தில் பனை வாழ்வியல் இயக்கம் சார்பாக பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடையத்தில் பனை வாழ்வியல் இயக்கம் சார்பாக பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடையம்-ராமநதி, சாலை, தென்பத்து மற்றும் வடபத்துக் குளக்கரைகளில் பனைவாழ்வியல் இயக்கம் சார்பில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகள், இலுப்பை, வேம்பு மற்றும் மூலிகை மரக்கன்றுகள் நடும் திருவிழா நடைபெற்றது. 
சமூகக் காடுகள் திட்டம், வனவர் செல்லத்துரை, கடையம் காவல் உதவி ஆய்வாளர் தமிழரசன், பனை வாழ்வியல் இயக்கத் தலைவர் ஜான் பீட்டர், ஒருங்கிணைப்பாளர் பாரதிராஜன், பசுமைஇயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் அந்தோணிராஜ் ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.
சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி ஆசிரியர்கள் வானதி, சசி, தமிழ்த் தேசிய கட்சி மாநில அமைப்புச் செயலர் ஹரிமுருகன், ரிலையபில் சந்திரசேகர், தெற்குக் கடையம் முன்னாள் ஊராட்சித் தலைவர் சண்முகம், கடையம் வட்டார வேளாண் துறை தொழில்நுட்ப உதவி அலுவலர் செல்வகணேஷ், தன்னார்வலர்கள் லட்சுமிசேகர், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
நிகழ்ச்சியில் திருநெல்வேலி ரோட்டரி சங்கத்தினர், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவர்கள் மாணவிகள் உள்படபலர் கலந்து கொண்டு பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com