சிவகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, வட்டாட்சியர் கிருஷ்ணவேல் தலைமை வகித்தார். துணை வட்டாட்சியர் ராமலிங்கம், மண்டலத் துணை வட்டாட்சியர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரிடர் காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில், ராயகிரி பேரூராட்சி செயல் அலுவலர் சு. லெனின், சிவகிரி பேரூராட்சி தலைமை எழுத்தர் சுதா, காவல் உதவி ஆய்வாளர்கள் தர்மராஜ், சுடரொளி, கால்நடை உதவி மருத்துவர் விஜய், சுகாதாரத் துறை சார்பில் சாராபாய், வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தங்கம், வருவாய் ஆய்வாளர்கள் பாக்கியலட்சுமி, சிவனுப்பாண்டி, சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.