அச்சன்புதூர் துணை மின் நிலையப் பகுதியில் பராமரிப்புப் பணிகளுக்காக வரும் 26ஆம்தேதி மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தென்காசி மின்விநியோக செயற்பொறியாளர் பா.கற்பகவிநாயக சுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அச்சன்புதூர் துணை மின் நிலையப் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை (செப்.26) நடைபெறவுள்ளது.
இதனால் அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் தடை செய்யப்படும். இதனால் அச்சன்புதூர், வடகரை, நெடுவயல், வாவாநகரம், காசிதர்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல்குடியிருப்பு மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றார் அவர்.