ஏஐடியூசி தொழிலாளர்கள் போராட்டம்

தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.

தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.
தொழிலாளர்களுக்கு எதிரான புதிய சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.சடையப்பன் தலைமை வகித்தார். இசக்கியம்மாள், கிருஷ்ணசாமி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலர் எஸ்.காசிவிஸ்வநாதன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்ட பொதுச் செயலர் எம்.எஸ்.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலர் எஸ்.நல்லதம்பி, ஏஐடியூசி மாவட்டச் செயலர் டி.நாமதுரை, அமைப்புசாரா தலைவர் டி.சுப்பையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com