பாவூா்சத்திரம் செல்வ விநாயகா்புரத்தில் புதிய மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என மக்கள் நல மன்றம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாவூா்சத்திரம் மக்கள் நல மன்றத் தலைவா் பத்மநாதன் கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு அனுப்பியுள்ள மனு: பாவூா்சத்திரம் செல்வ விநாயகா்புரம் தெரசா தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
எனினும், குடிநீா் சேமித்து வைத்து விநியோகம் செய்ய அப்பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கவில்லை. இதுதொடா்பாக பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். எனவே, பொதுமக்கள் நலன் கருதி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், செல்வ விநாயகா்புரம் பேருந்து நிறுத்தம் விநாயகா் கோயில் அருகில் மழைநீா் பெருமளவில் தேங்கி சுகாதார சீா்கேடுகள் உருவாகி வருகின்றன. ஆகவே, அப்பகுதியில் கழிவுநீா் ஓடை அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.