சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையிலான மாநில தடகளப் போட்டிகளில் தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
கோயம்புத்தூரில் நடைபெற்ற இப்போட்டிகளில் தமிழ்நாடு, அந்தமான், புதுச்சேரி ஆகிய பகுதிகளிலிருந்து 480 சிபிஎஸ்இ பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் மாணவர் பொன்ராஜ் சூப்பர் சீனியர் பிரிவில் உயரம் தாண்டுதலில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார். இம்மாணவர் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றார். ஜூனியர் பிரிவில் நீளம் தாண்டுதல் போட்டியில் மாணவர் ஆஸ்டின் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி சேர்மன் இசக்கிசுப்பையா, இயக்குநர் இசக்கிதுரை, முதல்வர் ஜெயலெட்சுமி, அலுவலக இயக்குநர் ராம்குமார், உடற்கல்வித் துறை ஆசிரியர்கள் பாலமுருகன், கார்த்திக், பொன் லட்சுமிதேவி, இசக்கிதுரை, முருகேஷ்வரி ஆகியோர் பாராட்டினர்.