திருநெல்வேலி
நெல்லை கம்பன் கழகத்தின் தொடர் சொற்பொழிவு
நெல்லை கம்பன் கழகத்தின் 501ஆவது கம்ப ராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
நெல்லை கம்பன் கழகத்தின் 501ஆவது கம்ப ராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
அருள்மிகு தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். அ.முருகேசன் இறைவணக்கம் பாடினார். மருத்துவர் இளங்கோவன் செல்லப்பா வரவேற்றார். "கம்பனில் கற்பனை நயம்' என்ற தலைப்பில் வே.ஆறுமுகம், "சுந்தரகாண்டம்' என்ற தலைப்பில் கழகத் தலைவர் பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தி சொற்பொழிவாற்றினர்.
நிகழ்ச்சியில், தங்கமாரியப்பன், லட்சுமி அருண், கணேசன், பேராச்சிமுத்து, இசக்கிமுத்து, முனைவர் போஸ், நடராஜன், வேலாயுதம், முருகன், சைலப்பன், சங்கரன், லட்சுமி, கோமதி, பொன்னுக்கனி உள்பட பலர் கலந்துகொண்டனர். கழகச் செயலர் கவிஞர் பொன். வேலுமயில் நன்றி கூறினார்.