பிஎஸ்என்எல் தரைவழி தொலைபேசி மறு இணைப்பு மேளா பாளையங்கோட்டையில் புதன்கிழமை (செப்.25) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல். திருநெல்வேலி தொலைத் தொடர்பு மாவட்ட முதன்மை பொது மேலாளர் ரா.சஜிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிஎஸ்என்எல் தரைவழி இணைப்புகளில் இருந்து இரவு 10.30 மணி முதல் காலை 6 மணி வரையிலும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 24 மணி நேரமும் இந்தியாவில் எந்த ஒரு பகுதிக்கும் அனைத்து நெட்வொர்க்கிற்கும் அளவில்லா அழைப்புகள் பேசும் வசதி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஏற்கெனவே தரைவழி இணைப்புகளை பெற்று தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ துண்டிக்கப்பட்டநிலையிலுள்ள பாளையங்கோட்டை நகர் பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள், மீண்டும் இணைப்பு பெறும் வகையில் பிஎஸ்என்எல் சார்பில் சிறப்பு மேளாக்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பாளையங்கோட்டை, அன்புநகர், என்.ஜி.ஓ. காலனி, வி.எம்.சத்திரம், சாந்திநகர், வண்ணார்பேட்டை ஆகிய தொலைபேசி நிலையங்களில் புதன்கிழமை (செப்.25) காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிவரை சிறப்பு மறு இணைப்பு மேளாக்கள் நடைபெற உள்ளன என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.