பழையபேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பேட்டை சுற்றுவட்டாரங்களில் புதன்கிழமை (செப். 25) மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலி நகர்ப்புற செயற்பொறியாளர் சு. முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பழையபேட்டை துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, திருநெல்வேலி நகரம் மேலரதவீதி மேற்கு பகுதிகள், தெற்கு ரதவீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரதவீதி வடக்கு பகுதிகள், பழையபேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைக்குளம், குன்னத்தூர், பேட்டை, தொழில்பேட்டை, பாட்டபத்து, அபிஷேகப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களில் புதன்கிழமை காலை 9 மணி மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.