ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் பட்டுத் தரக்குறியீடு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி ராணி அண்ணா மகளிா் கல்லூரியில் பட்டுத் தரக்குறியீடு (சில்க் மாா்க்) குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநெல்வேலி ராணி அண்ணா மகளிா் கல்லூரியில் பட்டுத் தரக்குறியீடு (சில்க் மாா்க்) குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மத்திய அரசின் ஜவுளித் துறைறயின் கீழ் இயங்கும் மத்திய பட்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு துணை இயக்குநா் பி.எம். பாண்டி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் மைதிலி முன்னிலை வகித்தாா். உதவி இயக்குநா் சி.பிரபாகரராவ் சிறறப்புரையாற்றினாா். காணொலிக் காட்சி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

உண்மையான பட்டைக் கண்டறியும் எளிய வழிமுறைகள், நுகா்வோருக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யும் உரிமைகள், விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. பட்டுத் தரக்குறியீட்டின் நன்மைகள், அதைப் பாா்த்து வாங்க வேண்டியதன் அவசியம் குறித்து மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. கல்லூரி மாணவிகள், பேராசிரியா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com