ஆலங்குளம் முத்தாரம்மன் கோயில் திருவிழா:தசரா ஊர்வலத்துடன் தொடங்கியது

ஆலங்குளம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் திருவிழா தசரா ஊர்வலத்துடன் தொடங்கியது. 


ஆலங்குளம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் திருவிழா தசரா ஊர்வலத்துடன் தொடங்கியது. 
இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமமும், வருஷாபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து சனிக்கிழமை பகல் 1 மணிக்கு குழந்தைகள் பங்குபெறும் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.  ஞாயிற்றுக்கிழமை மாலை 1503 திருவிளக்கு பூஜையும்,  இரவு 8 மணிக்கு பேராசிரியர் ஞானசம்பந்தன் நடுவராக பங்கேற்கும் பட்டிமன்றமும், திங்கள்கிழமை (செப். 30) காலை கோமாதா பூஜையும், இரவு 12 மணிக்கு சாம பூஜையும் நடக்கிறது. செவ்வாய்க்கிழமை (அக். 1) காலை  பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் , பூ வளர்த்தலும் நடக்கிறது.  மாலை 5.30 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.  இரவு அம்பாள் சப்பரத்தில் வீதி உலா வருதல் அதைத் தொடர்ந்து நேமிதம், 54 முளைப்பாரி, ஆயிரம் கண்பானை ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா வழக்குரைஞர் கணபதி மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com