நான்குனேரி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்காக பணியாற்ற அக்கட்சியின் களக்காடு ஒன்றிய, நகர தேர்தல் பணிப் பொறுப்புக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
களக்காடு ஒன்றிய தேர்தல் பணிப் பொறுப்பாளர்களாக எம்எல்ஏக்கள் என். சுரேஷ்ராஜன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், எஸ். ஆஸ்டின், ராதாபுரம் முன்னாள் எம்எல்ஏ மு. அப்பாவு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
களக்காடு நகர தேர்தல் பணிப் பொறுப்பாளர்களாக மு. அப்துல்வகாப், பொ. சிவபத்மநாதன், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஏ.எல்.எஸ். லட்சுமணன், திருக்குறுங்குடி நகர தேர்தல் பணிப் பொறுப்பாளராக எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.