மானூர் அருகே தீக்குளித்த கல்லூரி மாணவி மருத்துவமனையில் இறந்தார்.
மானூர் அருகேயுள்ள சேதுராயன்புதூரைச் சேர்ந்த ரூபர்ட் பாலையா மகள் கண்மணி (24). இவர் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு, அஞ்சல் வழியில் பி.லிட். படித்து வந்துள்ளார். இவரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத பெற்றோர் அறிவுறுத்தினராம். இவர் ஆசிரியர் பயிற்சியில் 2 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லையாம். இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி வீட்டிலிருந்த கண்மணி தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் வெள்ளிக்கிழமை இரவு இறந்தார். மானூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.