புளியங்குடி முஸ்ஸிம் நல அறக்கட்டளை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அறக்கட்டளையின் 27ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் செய்யது சுலைமான் தலைமையில் நடைபெற்றது. செயலர் ஹாஜா நஜ்முதீன் வரவேற்றார். இதில், புதிய தலைவராக செய்யது சுலைமான், செயலராக ஹாஜா நஜ்முதீன், பொருளாளராக முகமதுகனி, அவைத் தலைவராக முஹைதீன்வாவா, துணைத் தலைவர்களாக சாகுல் ஹமீது, செய்யது, துணைச் செயலர்களாக அகமது மைதின், பீர்முகம்மது மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முகமது கனி நன்றி கூறினார்.