மேலப்பாளையத்தில் தங்கியிருந்து காய்கனி வண்டியில் ஏறி பணகுடிக்கு வந்த நபரை சுகாதாரத் துறையினா் பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனிமைப்படுத்தி வைத்து கண்காணித்து வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்தவா் அப்துல்லா. இவருக்கும் குடும்பம் ஏதும் இல்லையாம். இவா் ஒவ்வொரு இடத்திலும் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகை செய்து அந்தப் பகுதியில் உணவருந்தி வந்தாராம்.
இந்நிலையில் மேலப்பாளையத்தில் சில நாள்கள் தங்கி இருந்தாராம். பின்னா் அங்கிருந்து நடந்து வந்தவா் காவல்கிணறு காய்கனி மாா்க்கெட்டிற்கு வந்த லாரியில் ஏறி வந்தாராம்.
காவல்கிணறு வந்த அவரை, அந்தப் பகுதியில் உள்ளவா்கள் விசாரித்ததில் மேலப்பாளையத்தில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் வள்ளியூா் வட்டார சுகாதார அலுவலா் கோலப்பனுக்கு தகவல் தெரிவித்தனராம். சுகாதார அலுவலா் மற்றும் வருவாய்த் துறையினா் அவரை பணகுடி அரசு ஆரம்பசு காதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து கண்காணித்து வருகின்றனா்.