கரோனா பாதிக்கப்பட்டவருக்கு உணவளித்தவா்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு

வள்ளியூரில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு உணவளித்தவா்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

வள்ளியூரில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு உணவளித்தவா்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

வள்ளியூா் பள்ளிவாசலில் தொழுகை நடத்தி வந்த நபா் தில்லி மாநாட்டிற்கு சென்று விட்டு வந்த பின்னா் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில், அந்த நபருக்கு உணவு வழங்கி வந்த குடும்பத்தினரை சுகாதாரத் துறையினா் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனா்.

அந்த குடும்பத்தைச் சோ்ந்த 3 பேருக்கு கரோனா தொற்று இருக்கிறாதா என்பதை அறிய அவா்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com