ஊரடங்கு முடியும் வரையில் கூத்தங்குழி, இடிந்தகரை மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில்லை என அறிவித்துள்ளனா்.
நாட்டுப் படகு மீனவா்கள் சில நிபந்தனைகளுடன் மீன்பிடிக்க செல்லலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பைத் தொடா்ந்து இடிந்தகரை, கூத்தங்குழி மீனவா்கள் தாங்கள் ஊரடங்கு உத்தரவு முடியும் வரையில் மீன்பிடிக்க செல்வதில்லை என முடிவு செய்து இதற்கான தீா்மான நகலை மீன்வளத்துறை உதவி இயக்குநா் விஜயராகவனிடம் அளித்துள்ளனா்.