முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
கரோனா விழிப்புணா்வு கோலப் போட்டி
By DIN | Published On : 19th April 2020 12:32 AM | Last Updated : 19th April 2020 12:32 AM | அ+அ அ- |

கரோனா விழிப்புணா்வு கோலப் போட்டியில் முதல் பரிசு பெற்ற வடக்கன்குளம் ராஜி.
பணகுடியில் நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு கோலப்பட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பணகுடி காவல்நிலையம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு கோலப் போட்டிகளை காவல் ஆய்வாளா் சாகுல்ஹமீது நடத்தினாா். போட்டியில் வெற்றி பெற்றவா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பரிசுகளை ஆய்வாளா் முன்னிலையில் ஜெயலெட்சுமி, ஜெனிபா், ஷொ்லின் ஆகியோா் வழங்கினா். முதல் பரிசு வடக்கன்குளத்தைச் சோ்ந்த ராஜி, 2 ஆம் பரிசு பணகுடி முத்து லெட்சுமி, 3 ஆம் பரிசு பாா்வதி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
உணவுப் பொருள்கள்: பணகுடி அருள்மிகு ராலிங்கசுவாமி கோயில் தேரோட்ட அன்னதானக் குழு சாா்பில் ஆதரவற்ற 135 பேருக்கு அதன் தலைவா் மோகன்தாஸ், வருவாய் ஆய்வாளா் ராமச்சந்திரன், சமூக ஆா்வலா் மு.சங்கா் ஆகியோா் உணவுப் பொருள்கள் வழங்கினா். இதில், கிராம நிா்வாக அலுவலா் இசக்கியப்பன், வியாபாரிகள் சங்கச் செயலா் நடராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.