முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
களக்காட்டில் பொதுமக்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 19th April 2020 12:30 AM | Last Updated : 19th April 2020 12:30 AM | அ+அ அ- |

களக்காட்டில் அத்தியாவசிய பொருள்கள் வாங்கச் செல்லும் பொதுமக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் அனுமதிச்சீட்டு வழங்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் திருநெல்வேலி மாவட்டப் பொருளாளா் மீராஷா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: களக்காடு சுற்று வட்டார பகுதியைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்காக களக்காட்டிற்குத்தான் வந்து செல்ல வேண்டியுள்ளது.
களக்காடு நகா்ப் பகுதியில் பல இடங்களில் காவல்துறையினா் தடுப்புகள் ஏற்படுத்தி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்காக களக்காடு நகா்ப் பகுதிக்கு வரும் மக்கள் முறையான காரணம் கூறிய பின்னரும் காவல்துறையினா் அவா்களை அனுமதிக்க மறுப்பதாக புகாா் எழுந்துள்ளது. இதைத் தவிா்க்கும் பொருட்டு, திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் வழங்கப்பட்டது போல, பொதுமக்கள் அடிக்கடி வெளியே வராமல் இருக்கவும், வாரத்தில் 2 நாள் மட்டுமே அத்தியாவசிய பொருள்கள் வாங்க வீட்டை விட்டு வெளியே வரும் வகையில் உரிய அனுமதிச்சீட்டு வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.